Wednesday, September 26, 2018

இனிமேல் ஆதார்: எங்கு தேவை; தேவையில்லை- 10 முக்கிய தகவல்கள்

இனிமேல் ஆதார்: எங்கு தேவை; தேவையில்லை- 10 முக்கிய தகவல்கள் 

ஆதார் தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பளித்துள்ள உச்ச நீதிமன்றம், அரசியல் சட்டப்படி ஆதார் சரியானது தான். ஆதார் எண்ணை போலியாக உருவாக்க முடியாது, அதேசமயம் மக்களின் தனிப்பட்ட தகவல்களை உரியமுறையில் பாதுக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது, அதற்கு ஏற்றவகையில் ஆதார் சட்டங்களில் திருத்தம் செய்யப்பட வேண்டும் எனக் கூறியள்ளது.
இதைத்தொடர்ந்து ஆதார் தொடர்பான உத்தரவில் புதிய மாறுதல்கள் குறித்து பார்க்கலாம்:








1) எந்த ஒரு தனியார் நிறுவனங்களும் உங்கள் ஆதார் விவரங்களை கேட்கக்கூடாது
2) தனியார் நிறுவனங்களுக்கு தகவல்களை தர அனுமதி தரும் ஆதார் சட்டத்தின் 57வது பிரிவு ரத்து செய்யப்படுகிறது.
3) மொபைல் போன் நிறுவனங்களுக்கு ஆதார் எண் தர வேண்டிய அவசியமில்லை
4) வங்கிக் கணக்குடன் ஆதார் எண் இணைக்க வேண்டியதில்லை.
5) வங்கிகளுக்கு இனிமேல் ஆதார் எண் வழங்க வேண்டிய அவசியம் இல்லை
6) பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க ஆதார் எண்ணை கேடக்கக் கூடாது
7) வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஆதார் எண் கட்டாயம்
8) பான் எண்ணுடன் ஆதார் எண் இணைப்பது கட்டாயம்
9) அரசு மானியம், உதவி பெற உங்களுக்கு தகுதி இருந்தால் ஆதார் எண்ணை காட்டி அதனை தடுக்க முடியாது
10) தனிநபரின் தகவல்களை பாதுகாக்க வேண்டியது அரசின் கட
மை

No comments:

Post a Comment